மரணப்படுக்கையில் இருந்த காதலியை கண்ணீருடன் கரம்பிடித்த காதலன்.. குவியும் பாராட்டுக்கள்.!
பல கனவுகளுடன் மனதை பரிமாறிக்கொண்ட உள்ளங்கள், எதிர்பாராத உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு, பின் புற்றுநோயின் இறுதி தருவாய் என தெரியவந்ததும் இறுதியில் நடந்த திருமணம் காதல் உள்ளங்களை கலங்கவைத்துள்ளது.
விட்டுக்கொடுப்பதில்லை:
அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டு என்பது வள்ளலாரின் வாக்கு. அன்பு மனிதர்களை பொறுத்த வரையில் காதலாக இருக்கிறது. இந்த காதலுக்காக ஒவ்வொருவரும் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய முடிவை எடுத்து, சாதனைகளையும்-சோதனைகளையும் சந்திக்கின்றனர். ஆனால், காதல் அப்படியே தொடரும் போது, அதனை ஒருவரும் ஒருபோதும் விட்டுக்கொடுப்பதில்லை.
கேன்சர்:
காதலுக்காக எந்த எல்லைக்கும் செல்லத்துணியும் அன்பு மிகப்பெரிய விஷயமாக உலகளவில் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட காதலி கேன்சரின் இறுதிக்கட்டத்தில் இருப்பதை அறிந்த காதலன், மருத்துவமனையிலேயே காதலியை கரம்பிடித்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

வைரலான போட்டோ:
இதுதொடர்பான நிகழ்வு வடமாநிலத்தில் நடந்ததாக தெரியவரும் நிலையில், எங்கு என்பது குறித்த விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. தம்பதியின் புகைப்படம் மட்டும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த தகவலில், பெண்ணுக்கு கேன்சர் இருப்பது இறுதிக்கட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதலின் ஆழம்:
இதனால் காதலியின் நிலைமையை அறிந்து நேரில் மருத்துவமனைக்கு வந்த காதலன், காதலியை மணந்து இருக்கிறார். கண்ணீருடன் இருவரும் தங்களின் திருமண பந்தத்தில் இணைந்தது புகைப்படமாக வெளி உலகுக்கு தெரியவந்தால், காதலின் ஆழத்தை உணர்த்துவதாக பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
लड़का और लड़की चार साल से रिलेशनशिप में थे अचानक लडकी का तबीयत खराब होता है
— ROHIT SINGH (@desHi__chora) May 29, 2026
हॉस्पिटल ले जाते तो पता चलता कैंसर है और लास्ट स्टेज में पहुंच चुकी है बचने का चांस नही है
जैसे ही लड़का को पता चलता लड़का आता है और बोला मुझे हर जन्म में तुम ही चाहिए और रोते हुए मांग में सिंदूर भर… pic.twitter.com/HY9P3wNzqY