பலாத்காரத்துக்கு சிறுமி எதிர்ப்பு.. நடுரோட்டில் படுகொலை முயற்சி.. பரபரப்பு வீடியோ.!
பாலியல் பலாத்காரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தப்பி சென்ற சிறுமியை, காமுகன் பள்ளி சென்று வருகையில் இடைமறித்து கொலை செய்ய முயற்சித்து கத்தியால் குத்திய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள கோபால்கஞ்ச் மாவட்டத்தை சார்ந்த 8 ஆம் வகுப்பு பயின்று வரும் சிறுமி, பள்ளியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது, அவரை பின்தொர்ந்து வந்த மர்ம நபர், அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.
இதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்து மர்ம நபரின் பிடியில் இருந்து தப்பித்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிறுமியை சரமாரியாக குத்தி இருக்கிறார்.
गोपालगंज: छेड़खानी का विरोध करने पर आठवीं की स्कूली छात्रा को असरफ अली पुत्र गुड्डा ने दिन-दहाड़े चाकुओं से छलनी किया, 13 सेकेंड में 8 बार चाकू से वार किया, गिरफ़्तार pic.twitter.com/k0pyxA2tDx
— Newsroom Post (@NewsroomPostCom) December 21, 2021
13 நொடிக்குள் 8 முறை சிறுமியை சரமாரியாக கத்தியால் குத்தியதால், இரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்கு பாட்னா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த விஷயம் தொடர்பான சி.சி.டி.வி கேமிரா காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்.