நடு ரோட்டில் இளம்பெண்ணை ஓங்கி அறைந்த பைக் டாக்ஸி ஓட்டுனர்! பெண்ணின் பரிதாப நிலையை பாருங்க! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!



bangalore-woman-assaulted-by-bike-taxi-driver

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இளம் பெண் ஸ்ரேயா, கடந்த 13ஆம் தேதி வேலைக்குச் செல்வதற்காக பைக் டாக்ஸியை புக் செய்துள்ளார். 

வேகமான ஓட்டினார் மற்றும் விதிமீறல்

அந்த பைக் டாக்ஸியை சுகாஷ் என்ற ஓட்டுநர் ஓட்டியுள்ளார். அவர் வேகமாக ஓட்டியதோடு, சிக்னலில் நிற்காமலும், வழக்கமான பாதையை தவிர்த்து மாற்றுப் பாதையில் செலுத்தினார். இது குறித்து ஸ்ரேயா சந்தேகம் எழுப்ப, அவர் மீது கோபம் கொண்ட ஓட்டுநர், “நான் மூன்று ஆண்டுகளாக பைக் ஓட்டுகிறேன், எனக்குத் தெரியும் எப்படி ஓட்டுவது” எனக் கூறியதாக கூறப்படுகிறது.

தாக்குதல் மற்றும் வீடியோ பதிவு

இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவான நிலையில், சுகாஷ் என்ற ஓட்டுநர், ஸ்ரேயாவின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதில் நிலைதடுமாறிய ஸ்ரேயா கீழே விழுந்தார். அருகில் இருந்த சிலர் இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். வீடியோ வீரலாக பரவியது.

போலீசாரின் நடவடிக்கை

ஸ்ரேயா காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் சுகாஷை விசாரணைக்கு அழைத்தனர். விசாரணையின் போது அவர் மீது தாக்குதல் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், தற்போது போலீசார் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: கதவை தட்டி நான் கர்ப்பமா இருக்கேன்! உதவிய மூதாட்டிக்கு இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! திடுக்கிடும் அதிர்ச்சி வீடியோ...

இந்த சம்பவம் பெங்களூரு நகரில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் பாதுகாப்பு மீதான கேள்விகளும் எழுந்துள்ளன.

இதையும் படிங்க: பாம்பு படையையே நடுங்க வைக்கும் செடிகள்! உங்க வீட்டில் இந்த செடிகள் இருக்கா?