மனைவியின் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம்.. முன்னாள் கிரிக்கெட் வீரர்..!

மனைவியின் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம்.. முன்னாள் கிரிக்கெட் வீரர்..!


arunlal-first-wife-has-accepted-his-second-marriage

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், தனது முதல் மனைவியின் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அருண்லால்(வயது 66). இவர் தற்போது மேற்குவங்க ரஞ்சி அணியின் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவரது நண்பர் மற்றும் ஆசிரியையான புல்புல் சாஹா (வயது 38) என்பவரை வரும் மே மாதம் திருமணம் செய்ய இருக்கிறார்.

இவர்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன் திருமணம் நிச்சயமான நிலையில், வரும் மே 2ஆம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரரான அருண்லால் குறித்த பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் முதன் முறையாக ரீனா என்பவரை திருமணம் செய்த நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து செய்துள்ளனர்.karnatakaபின் இருவரும் பிரிந்த நிலையில், ரீனாவின் உடல்நலக்குறைவு காரணமாக, இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர். தொடர்ந்து தற்போது தனது முதல் மனைவியின் ஒப்புதலோடு அருண்லால் இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார். அத்துடன் திருமணத்திற்கு பின் அருண்லால் மற்றும் புல்புல் சாஹா தம்பதிகள் நோய்வாய்ப்பட்ட ரீனாவை கவனித்துகொள்வர்கள என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய திருமண தம்பதிகளின் திருமண வாழ்த்து அட்டைகள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருவதையடுத்து, இவர்களுடைய திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.