மணிப்பூரில் மீண்டும் ஒரு கொடூர சம்பவம்... அதிர்ச்சியில் பொதுமக்கள்.!

மணிப்பூரில் மீண்டும் ஒரு கொடூர சம்பவம்... அதிர்ச்சியில் பொதுமக்கள்.!



another-horrible-incident-in-manipurpeople-in-shock

மணிப்பூர் மாநிலத்தில்  இன குழுக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவது  தொடர்பான விவகாரத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தக் கலவரத்தால் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு  பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரம் நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி மக்களை உறைய வைத்தது. அதன் தாக்கம் மக்களிடமிருந்து மறைவதற்குள் மீண்டும் ஒரு அதிர்ச்சியான சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது.

Indiaதற்போது மீண்டும் ஒரு வீடியோ வெளியாகி மக்களை உரையச் செய்து இருக்கிறது. இந்த வீடியோவில் குக்கியினை இளைஞர் ஒருவரின் தலை துண்டாக வெட்டப்பட்டு  முள்வேளியில் வைக்கப்பட்டது போன்ற வீடியோ  தற்போது பரவி வருகிறது.

ஆனால் இந்த சம்பவம் ஜூலை இரண்டாம் தேதியை நடைபெற்றது எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து வெளியாகி மக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.