நண்பனுடன் தேயிலை தோட்டத்தை சுற்றிப்பார்க்க சென்ற 15 வயது சிறுமி.! நண்பனை தாக்கிவிட்டு கயவர்கள் செய்த கொடூர செயல்.!



4 person abused young girl

மேற்குவங்காளத்தை சேர்ந்த தம்பதி தங்கள் 15 வயது மகளுடன் கடந்த சில நாட்களுக்கு முன் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சந்தன்புரா பகுதிக்கு வந்து தங்கி அங்குள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய வந்துள்ளனர். இந்நிலையில், அந்த 15 வயது சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தனது நண்பருடன் பூபாரா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு சுற்றிப்பார்க்க சென்றுள்ளார்.

அந்த சிறுமியின் நண்பனும் மேற்குவங்காளத்தை சேர்ந்தவர் தான். அவர் இடுக்கியில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். தேயிலை தோட்டத்தில் இருந்து சிறுமியும் அவரது நண்பரும் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த 4 பேர் சிறுமியின் நண்பரை கடுமையாக தாக்கிவிட்டு அந்த சிறுமியை தேயிலை தோட்டத்தில் வைத்து அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அப்போது, சிறுமியின் ஆண் நண்பன் கூச்சல் சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். இதனைப்பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இதனையடுத்து இதுதொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்தநிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிசென்றது அப்பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்துவந்த தொழிலாளர்கள் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 4 பேரையும் போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.