அட இது தெரியாம போச்சே.. இயக்குனர் அட்லீக்கு விரைவில் டாக்டர் பட்டம்.!
நீண்ட நாள் வாழ வேண்டுமா? இந்த கீரையை மிஸ் பண்ணாதீங்க.!

கரிசலாங்கண்ணி கீரை ஞான மூலிகை என நம்முடைய முன்னோர்கள் கூறுகின்றனர். அதற்குக் காரணம் கரிசலாங்கண்ணி கீரையில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில், மஞ்சள் கரிசலாங்கண்ணி மற்றும் வெள்ளை கரிசலாங்கண்ணி என இரண்டு வகைகள் வகைகள் உள்ளது.
இதில் எந்த வகை கரிசலாங்கண்ணியை சாப்பிட்டாலும் உடலுக்கு நல்லது தான். எனவே கரிசலாங்கண்ணி கீரையை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பாக கரிசலாங்கண்ணி கீரையை சாப்பிடுவதால் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழலாம் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். தினமும் இளநீரில் கரிசலாங்கண்ணி சாறு கலந்து குடிப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
வெள்ளை கரிசலாங்கண்ணியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல் சம்பந்தமான நோய் மற்றும் ரத்த சோகை போன்ற நோய்களை குணப்படுத்துகிறது.
புற்றுநோய், கல்லீரல் வீக்கம் மற்றும் கல்லீரல் சம்பந்தமான அனைத்து நோய்களையும் தீர்க்கும் பண்பு கரிசலாங்கண்ணிக்கு உள்ளது.
இதில் மஞ்சள் கரிசலாங்கண்ணி சாப்பிடுவதால் வலிப்பு, ரத்த புற்றுநோய் போன்ற நோய்கள் குணமாகும்.