நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
என்னது... விஜய்யின் 5 மணி மாநாடு பேச்சுக்கு இதுதான் காரணமா? விஜய்- க்கு 6 மணிக்கு அப்புறம் இந்த வீக்கனஸ் இருக்கா!
தமிழக அரசியலில் புதிய அலை கிளப்பிய விஜய்யின் அரசியல் பயணம் குறித்த விவாதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்குப் பிறகு, திருச்சி சூர்யா அளித்த பேட்டி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் சர்ச்சைக்குரிய கருத்துகள்
அந்த பேட்டியில், விஜய் மாலை 6 மணிக்குப் பிறகு வெளியே வருவதில்லை என்றும், இரவு நேர கட்சி கூட்டங்கள் அல்லது பூத் கமிட்டி நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டார் என்றும் சூர்யா தெரிவித்துள்ளார். இது சினிமா துறையில் அனைவருக்கும் தெரிந்த விஷயமென அவர் கூறியுள்ளார். மேலும், ஒரு அரசியல் தலைவருக்கு இரவு நேரக் கூட்டங்களில் பங்கேற்பது அவசியமான ஒன்று; ஆனால் விஜயின் பழக்கவழக்கம் அதற்கு இடையூறாக அமையும் என சூர்யா கூறியுள்ளார்.
மாநாடு நேரம் குறித்த குறிப்பு
மற்ற அரசியல் கட்சிகள் மாலை நேரத்தில் மாநாடுகளை நடத்தும் நிலையில், வெற்றிக் கழகம் பகல் நேரத்தில் மாநாடு நடத்தியது விஜயின் தனிப்பட்ட பழக்கத்தைக் காரணமாகக் கொண்டது என சூர்யா மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.
மதுபானம் குறித்த குற்றச்சாட்டு
மாலை 6 மணிக்குப் பிறகு விஜய் மதுபானம் உட்கொள்ளாமல் இருக்க முடியாது; அதனால் அவர் வெளியில் வருவதில்லை என சூர்யா குற்றம்சாட்டியுள்ளார். இப்படிப்பட்ட நபரிடம் ஆட்சியை ஒப்படைப்பது சாத்தியமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த கருத்துக்கள், விஜயின் அரசியல் எதிர்காலம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைச் சூழ்ந்து பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. இதனால் தமிழக அரசியலில் விஜயின் நிலைப்பாடு மீண்டும் ஒரு முறை மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
உண்மை தான் போல pic.twitter.com/aDgehuFUix https://t.co/XIwDKEmron
— BK (@esalacupnamdhu) August 21, 2025
இதையும் படிங்க: வேற லெவல்.. தவெக மாநாட்டில் கூட்டமாக சேர்ந்து அடித்து பேசும் தமிழக பெண்கள்! எங்கள் குடும்பம் மொத்தகமும் தளபதிக்கு தான்... வைரலாகும் வீடியோ!