அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
வாத்தியார் பட நடிகை மல்லிகா கபூர் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
வாத்தியார் பட நடிகை மல்லிகா கபூர் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
தமிழில் பரத் நடித்த அழகாய் இருக்கிராய் பயமா இருக்கிறது என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் மல்லிகா கபூர். பின்னர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்த வாத்தியார் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
1985 இல் டெல்லியில் பிறந்தார். மாடலிங் துறையில் கலக்கி வந்த இவர் 2005 இல் வெளியான அல்புதாட்தீப் என்ற மலையாள படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.அதன் பின்னர் தமிழ் ஹிந்தி மலையாளம் என பல படங்களில் நடித்துள்ளார்.
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, வாத்தியார் படங்களை தொடர்ந்து புலி வருது, அந்தோணி யார், சொல்ல சொல்ல இனிக்கும் போன்ற படங்களில் நடித்துள்ளார் மல்லிகா கபூர்.
மிகவும் அழகான தோற்றம், நல்ல நடிப்பு இவை அனைத்தும் இருந்தும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வர முடியவில்லை. இறுதியாக 2011 இல் மலையாளத்தில் வெளிவந்த மகரமஞ்சி என்ற மலையாள படம் தான் இவரது கடைசி படம். அந்த படத்திற்கு பிறகு இவரை எந்த ஒரு படங்களிலும் காணமுடியவில்லை.