"உரிமை காக்க போராடுவதே கடமை.. தத்தகிட தித்தோம்" வெறியேற்றும் உறியடி2 டீசர்!

"உரிமை காக்க போராடுவதே கடமை.. தத்தகிட தித்தோம்" வெறியேற்றும் உறியடி2 டீசர்!



uriyadi-2-teaser-released

அறிமுக நடிகர் விஜயகுமார் தயாரித்து, இயக்கி, இசையமைத்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் உறியடி. முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தின் முதல் பாகம் 2016 ஆம் ஆண்டு வெளியானது. 

பொருளாதார அளவில் பெரிய வெற்றியடையாவிட்டாலும் கல்லூரி மாணவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் இளைஞர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. படத்தில் ஓரே பாடல் இடம்பெற்றாலும் "மானே..  மானே.. " என பலரின் மனதில் நீங்கா இடம்பிடித்தது. 

Uriyadi2

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் 'உறியடி 2' என்ற பெயரில் தற்போது உருவாகி வருகிறது. சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமாக 2டி எண்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இதனையும் விஜய்குமார் இயக்கி நடித்துள்ளார். 

கோவிந்த் வசந்த் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். லினு.எம் படத்தொகுப்பாளராக பணிபுரிந்துள்ளார். இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கி வெறும் 36 நாட்களில் படப்பிடிப்பு ஒரே கட்டத்தில் முடிவடைந்தது. மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. படத்தின் டீசரை பார்க்கும் பொழுது சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் அரசியலில் அடியெடுத்து வைக்க அருமையான பாடமாக இருப்பது போல் தோன்றுகிறது.