நான் அவரைதான் திருமணம் செய்துகொள்வேன்! தனது வருங்கால கணவர் குறித்து முதன்முதலாக மனம்திறந்த நடிகை திரிஷா!
நான் அவரைதான் திருமணம் செய்துகொள்வேன்! தனது வருங்கால கணவர் குறித்து முதன்முதலாக மனம்திறந்த நடிகை திரிஷா!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நடிகை திரிஷா.இவர் ரஜினி, கமல், விஜய்,அஜித் சூர்யா என பல உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து தற்போது நடிகை திரிஷாவின் நடிப்பில் உருவான ராங்கி மற்றும் பரமபத விளையாட்டு போன்ற படங்கள் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதைத்தொடர்ந்து திரிஷா மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் தற்போது திரிஷா தனது திருமணம் குறித்து வருங்கால கணவர் குறித்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது, நான் என்னை பற்றி நன்கு புரிந்து கொண்டவரைதான் திருமணம் செய்து கொள்வேன். அது கண்டிப்பாக காதல் திருமணமாகதான் இருக்கும் அப்படி நன்றாக புரிந்து கொண்ட ஒருவரை சந்திக்கும்போது திருமணம் நடக்கும். அதுவரை, நான் சிங்கிள் தான். அதை பற்றி கவலைப்படவில்லை. ஒருவேளை அப்படி ஒருவரை சந்திக்கவில்லை என்றால் கடைசிவரை நான் சிங்கிளாக இருக்கவும் தயார். அதில் எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது என கூறியுள்ளார்.