எதிர்பாராத நிலையில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய டஃப் போட்டியாளர் செய்த முதல் வேலை! தீயாய் பரவும் புகைப்படம்!

எதிர்பாராத நிலையில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய டஃப் போட்டியாளர் செய்த முதல் வேலை! தீயாய் பரவும் புகைப்படம்!



samyuktha-with-family-photo-viral

விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்க 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் 50 நாட்களுக்கு மேல் கடந்து சென்று கொண்டுள்ளது. போட்டியின் இரண்டாவது வாரம் நடிகை ரேகா பின் பாடகர் வேல்முருகன் அவரை தொடர்ந்து சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும்  பாடகி சுசித்ரா என இதுவரை 4 பேர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் பிக்பாஸ் நாள்தோறும் வித்தியாசமான பல டாஸ்குகளை கொடுத்து வருகிறார். இதனால் மோதல்,வாக்குவாதங்களும் உருவாகி வருகிறது. இவ்வாறு பல சுவாரஸ்யங்களுடன் சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வார எலிமினேஷன் பட்டியலில் சோம், பாலா, ஆரி, ரமேஷ், அனிதா, சனம் ஆகிய ஏழு பேரும் நாமினேட் ஆகியிருந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் Nomination Topple card என்ற புதிய பவர் ஒன்றை அறிமுகம் செய்தார். அதனை வென்ற அனிதா சம்யுக்தாவை நாமினேட் செய்திருந்தார்.

Samyuktha
இந்தநிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து சம்யுக்தா வெளியேற்றப்பட்டார். இதனால் மிகுந்த வருத்தமடைந்தாலும் தனது மகளை பார்க்க போவதாக அவர் திருப்தி அடைந்துகொண்டார்.  இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சம்யுக்தா முதல் வேலையாக அவரது குடும்பத்தினர் அனைவரையும் சந்தித்துள்ளார்.  இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.