80 லட்சம் போச்சு.. கூடவே இருந்து ஏமாற்றிய நபர்.! நடிகை ராஷ்மிகா எடுத்த அதிரடி நடவடிக்கை!!

80 லட்சம் போச்சு.. கூடவே இருந்து ஏமாற்றிய நபர்.! நடிகை ராஷ்மிகா எடுத்த அதிரடி நடவடிக்கை!!



Rashmika manager cheated 80 lakhs from her

கடந்த 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த அவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். நடிகை ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த பான் இந்தியா படமான புஷ்பா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து இந்தியளவில் பிரபலமானார்.

rashmika

அவர் தற்போது புஷ்பா 2 மற்றும் ரன்பீர் கபூர் நடிக்கும் அனிமல் என்ற படத்தில் நடித்து வருகிறார். அனிமல் திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் நடிகை ராஷ்மிகாவிடம் மேனேஜராக பணியாற்றி வந்த நபர் மோசடி செய்த தகவல் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மேலாளர் அவரிடம் ரூ.80 லட்சம் ஏமாற்றிவிட்டாராம். இதுகுறித்து தெரிந்தவுடனே ராஷ்மிகா அவரை பணியை விட்டு நீக்கிவிட்டாராம். மேலும் இதுகுறித்து வெளியே தெரிய வேண்டாம் என எண்ணி புகார் எதுவும் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.