கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
பட்டத்து இளவரசரை தவறவிட்டீர்களா?? உங்களுக்காக ஒரு ஸ்பெஷலான விஷயம் இருக்கு.! மிஸ் பண்ணிடாதீங்க!!

பிரபல இயக்குனர் மணிரத்னம் கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் படத்தை இரு பாகங்களாக இயக்கி வருகிறார். மிகவும் பிரமாண்டமாக, பெரும் பொருட் செலவில் உருவாகும் இதன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் விக்ரம் அதில் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படக்குழு சமூகவலைத்தள பக்கத்தில் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பட்டத்து இளவரசரை மிஸ் செய்தீர்களா? உங்களுக்கான ஸ்பெஷல் எங்களிடம் இருக்கிறது என விக்ரமின் போஸ்டருடன் தெரிவித்துள்ளது. மேலும் புதிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
Missed the Crown Prince at the event?
— Lyca Productions (@LycaProductions) July 12, 2022
We have something special for you!
Tomorrow at 5 PM #PS1Teaser #PonniyinSelvan#PS1 releasing in theatres on 30th September in Tamil, Hindi, Telugu, Malayalam and Kannada!@madrastalkies_ #ManiRatnam @arrahman #Vikram @Tipsofficial pic.twitter.com/DyADtOG434