இதுதான் உண்மையான உதவி.! விவேக் செய்த உதவியால் கண்ணீர் விட்டு கதறி அழுத குமரிமுத்து.! வைரல் வீடியோ.!
இதுதான் உண்மையான உதவி.! விவேக் செய்த உதவியால் கண்ணீர் விட்டு கதறி அழுத குமரிமுத்து.! வைரல் வீடியோ.!
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்த நடிகர் விவேக் நேற்று முன்தினம் காலை மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில், நேற்று காலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நடிகர் விவேக் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. சினிமாவையும் தாண்டி சமூகத்தின் மீது பெரிதும் அக்கறை கொண்டவர் விவேக். இவரது எதிர்பாராத இந்த இறப்பிற்கு தமிழக மக்கள் அனைவரும் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்தனர். நடிகர் விவேக் இயற்கை மீது அதீத ஆர்வம் கொண்டவர். அவர் ஏராளமான மரங்களை நட்டு சாதனையும் படைத்துள்ளார்.
இந்தநிலையில், நடிகர் விவேக் செய்த உதவியை, நேர்காணல் ஒன்றில், கண்ணீர்மல்க கூறிய நடிகர் குமரிமுத்துவின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் குமரிமுத்து பேசுகையில், எனது கடைசி மகள் திருமணத்திற்கு கையில் பணமில்லை. அப்போது நான் தம்பி விவேக்கிடம் சென்று இலங்கையில் ஒரு நாடகத்துக்கு அழைக்கிறார்கள். நான் சென்றால் என் பெண் திருமணத்துக்காக 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று கூறினேன்.
Vivek was a fantastic comedian in movies and a hero in real life. Remembering this incident that Kumarimuthu shared in an interview with myself and @Sri_TS . He will continue to live in our smiles.#ripvivek pic.twitter.com/HBgdf4R8ET
— Cinema Academy India (@CinemaAcademyIn) April 17, 2021
உடனே அவர், எனக்கு எவ்வளவு கிடைக்கும் என்றார்? நான் ஒரு இரண்டு லட்சம் ரூபாய் வாங்கித் தருகிறேன் என்றேன். அதன் பின் விவேக் நான் வருகிறேன் என்றார். இதனையடுத்து நாடகம் எல்லாம் முடிந்தவுடன் எனக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். அதைத் தொடர்ந்து, விவேக் சார் அறையைக் காட்டுங்கள் என்றார்கள். உடனே அழைத்துச் சென்றேன். அங்கு, விவேக்கிற்கான சம்பளமான 2 லட்ச ரூபாயை அவருடைய கையில் கொடுக்கிறார்கள்.
ஆனால் அவர் அந்த பணத்தை அப்படியே வாங்கி, அண்ணே இந்தாங்க அண்ணே. 2 லட்ச ரூபாயை வைத்துக் கொள்ளுங்கள். உங்க பொண்ணு கல்யாணத்துக்கு கஷ்டப்படுகிறேன் என்று சொன்னீங்க, உங்களுக்கு 50 ஆயிரம் கொடுத்துட்டாங்களா? பொண்ணு கல்யாணத்தை நல்லபடியாக நடத்துங்க அண்ணே என்று கூறினார். அன்று தான் நான் சந்தோஷத்தில் அழுதேன், என் வாழ்க்கையிலேயே கலைவாணருக்குப் பிறகு அவன் ஒருவன் தான் நடிகன். அவன் தான் மனுஷன் என்று நெகிச்சியாக கூறியுள்ளார்.