தமிழிலிருந்து இந்திக்கு தாவிய நடிகை.. மும்பையில் செட்டிலானதும் ஆட்டத்தை ஆரம்பித்த ஜோதிகா.?

தமிழிலிருந்து இந்திக்கு தாவிய நடிகை.. மும்பையில் செட்டிலானதும் ஆட்டத்தை ஆரம்பித்த ஜோதிகா.?



Jothika acting hindi movie after many years


கோலிவுட் திரை உலகின் பிரபல நடிகையான ஜோதிகா தமிழில் பல படங்கள் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர். திருமணத்திற்கு பின்பு நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்ட ஜோதிகா தற்போது மீண்டும் திரைப்படங்கள் நடித்து மக்களை கவர்ந்து வருகிறார்.

Jyothika

இதன்பின், சமீபத்தில் இவர் நடித்து வெளியான திரைப்படங்களான 36 வயதினிலே, நாச்சியார், மகளிர் மட்டும், காற்றின் மொழி, செக்க சிவந்த வானம், பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பு போன்ற திரைப்படங்கல் இவருக்கு பாராட்டை பெற்று தந்திருக்கிறது. இதில் பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பு போன்ற திரைப்படங்களுக்கு இவரின் நடிப்பிற்காக விருதும் கிடைத்திருக்கிறது.

இதனையடுத்து இந்தியில் அஜய் தேவகன், மாதவன் போன்றவர்கள் கதாநாயகர்களாக நடிக்கும் திரில்லர் கதைக்களம் கொண்ட திரைப்படத்தில் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். படப்பிடிப்பு மும்பை, லண்டன் போன்ற வெளிநாடுகளில் எடுக்கப் போவதாக படக்குழு அறிவித்திருக்கிறது.

Jyothika

ஜோதிகா மும்பையில் குடும்பத்துடன் செட்டிலானவுடன் இவர் நடிக்கவிருக்கும் முதல் ஹிந்தி படம் இதுவே என்பதால் இந்தி சினிமா ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியில் ஜோதிகா நடிக்க வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.