மாஸ்டர் படம் ஷூட்டிங் நிறுத்தப்பட்டதோடு நடிகர் விஜய் வீட்டிலும் சோதனை.! பரபரப்பு செய்தி.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துவருகிறார் விஜய். படப்பிடிப்பு தற்போது நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் பகுதியில் நடைபெற்றுவரும் நிலையில் வருமான வரித்துறையினர் படப்பிடிப்பை தற்காலிமாக நிறுத்தி விஜய்யிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
AGS நிறுவனம் தயாரிப்பில் விஜய் கடைசியாக பிகில் படத்தில் நடித்திருந்த நிலையில் இன்று AGS நிறுவனத்திலும் வருமான வரி துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதன் அடுத்தகட்டமாக அதிகாரிகள் படப்பிடிப்பு நடைபெற்ற இடத்திற்கே சென்று விஜய்யிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும், சென்னை சாலிகிராமம் மற்றும் நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய்யின் வீடுகளிலும் வருமான வரித் துறையினா் சோதனையில் ஈடுபட்டுள்ளார்கள். அதனை தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் இருந்து நடிகர் விஜய்யை அவரது காரிலேயே வருமான வரித் துறையினர் சென்னைக்கு அழைத்து வந்ததாகக் கூறப்படுக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய்யின் வீட்டில் நடந்த இந்த திடீர் வருமானவரி சோதனை தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.