பயத்தினால் இரவெல்லாம் தூங்காமல் இருந்த பாரதிராஜா.. என்ன காரணம் என்று தெரிந்தால் அதிர்ச்சியாகிடுவீங்க.?
பயத்தினால் இரவெல்லாம் தூங்காமல் இருந்த பாரதிராஜா.. என்ன காரணம் என்று தெரிந்தால் அதிர்ச்சியாகிடுவீங்க.?

கோலிவுட் திரையுலகில் கிராமத்து கதைகளை மையப்படுத்தி திரைப்படங்கள் எடுப்பவர் இயக்குனர் பாரதிராஜா. இவரின் திரைப்படங்களை இன்று வரை விரும்பிப் பார்க்கும் ரசிகர்கள் பலர் உண்டு.
இயக்குனர்களின் இமயமான பாரதிராஜா சினிமாவின் ஆரம்பகட்டத்தில் பலவிதமான கஷ்டங்களை சந்தித்து இருந்தார். தமிழ் சினிமாவில் சண்டை காட்சிகள் இல்லாமல் படம் எடுத்து புதிய அத்தியாயத்தை உருவாக்கியவர்.
இதன்படி கமலஹாசன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் போன்ற பலர் நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் '16 வயதினிலே'. பாரதிராஜாவின் அறிமுக படமான இப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.
மேலும் இப்படத்தை குறித்த சுவாரசியமான சம்பவங்களை பாரதிராஜா பேட்டியில் கூறியிருக்கிறார். '16 வயதினிலே' திரைப்படம் திரையரங்கில் வெளியான போது நான். இரவெல்லாம் தூங்கவே இல்லை. 5 லட்சம் மதிப்பில் எடுக்கப்பட்ட '16 வயதினிலே' திரைப்படம் தோல்வியடைந்து விடும் என்று பயத்திலிருந்தேன். கோவணம் கட்டிய கதாநாயகனை மக்கள் ரசிப்பார்களா என்று யோசித்தேன். ஆனால் மிகப்பெரும் வெற்றியை பெற்றது படம் என்று கூறி இருக்கிறார் பாரதிராஜா.