அடுத்த படத்துல அதை செஞ்சுட்டா போச்சு! அட்லீ ஓபன் டாக்!

அடுத்த படத்துல அதை செஞ்சுட்டா போச்சு! அட்லீ ஓபன் டாக்!



Atlee vijay

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அட்லீ. இவர் அதற்கு முன்பு துணை இயக்குனராக பல படங்களில் பணியாற்றியுள்ளார். அட்லீ இயக்கிய முதல் படமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து தெறி, மெர்சல் என்ற ஹிட் படங்களை தந்தார். இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக விஜய்யை வைத்து பிகில் படத்தை உருவாக்கினார். இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

atlee

மேலும் பிகில் படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் அட்லீயிடம் ராயப்பன் கதாபாத்திரத்தை மட்டும் வைத்து படம் தயா‌ரிக்குமாறு ட்வீட்டரில் கூறியுள்ளார். அதற்கு அட்லீ அதற்கென்ன செஞ்சிட்டா போச்சு என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.