"என் வாழ்க்கை இப்படி ஆனதற்கு இவன் தான் காரணம்" ஆண்ட்ரியா வெளியிட்ட பதிவு..

"என் வாழ்க்கை இப்படி ஆனதற்கு இவன் தான் காரணம்" ஆண்ட்ரியா வெளியிட்ட பதிவு..



Andrea posted about her pet birthday

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். மேலும் பாடகியாகவும் தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார் ஆண்ட்ரியா.

Andrea

ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் முதன் முதலில் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். இப்படத்திற்கு பின்பு ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, பூஜை, ஆம்பள, உத்தம வில்லன், துப்பறிவாளன், வடசென்னை போன்ற ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஆண்ட்ரியா. சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான 'புஷ்பா' திரைப்படம் தமிழ் ரீமேக்கில் வெளியானது. இப்படத்தில் ம்ம் சொல்றியா மாமா ம்கும் சொல்றியா மாமா பாடலை பாடியிருக்கிறார். இப்பாடல் மிகப்பெரும் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

Andrea

இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஆண்ட்ரியா எப்போதும் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இவ்வாறு சமீபத்தில் இவர் வளர்க்கும் நாய்க்குட்டியின் புகைப்படத்தை பதிவிட்டு "இவன்தான் என் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வந்து மன அழுத்தத்தில் இருந்து திசை திருப்பியவன் என்று கூறி மூன்றாவது பிறந்த நாளை கொண்டாடும் நாய்க்குட்டிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இப்ப புகைப்படம் வைரலாகி வருகிறது.