கேப்டன் மகனின் படைதலைவன்.! 4 நாட்களில் செய்துள்ள வசூல் இவ்வளவா.! வெளிவந்த தகவல்!!
அடேங்கப்பா.. இப்படியும் சொல்லலாமா?.. குழந்தை உள்ளதாக ஆடையில் வாசகம் எழுதி தெரிவித்த பிரபல நடிகை..! குவியும் வாழ்த்துகள்..!!

இந்தி திரையுலகின் பிரபல நடிகரான ரன்வீர் கபூர் மற்றும் அவரின் மனைவி ஆலியா பட் ஆகியோர் நடிப்பில் உருவாகிய திரைப்படம் பிரம்மாஸ்திரா. இப்படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு உட்பட பலமொழிகளிலும் இம்மாதம் 9-ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரம்மாஸ்திரா திரைப்படத்தின் பிரமோஷனில் கலந்துகொண்ட ஆலியா பட், பிங்க் நிற ஆடையணிந்து வந்தார்.
அதில் குழந்தை உள்ளது என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இதன் மூலமாக தான் கருவுற்று இருப்பதை அவர் சூசகமாக ரசிகர்களுக்கு வெளியிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகவே ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அத்துடன் படப்பிடிப்பின் போது ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கி, 5 வருட பழக்கத்துக்கு பின் கடந்த ஏப்ரலில் இருவரும் திருமணம் செய்து கொண்டு தற்போது கருவுற்று இருப்பதை அறிவித்துள்ளார்.