நடிகர் அஜித்துடன் பிரபல இசையமைப்பாளர் திடீர் சந்திப்பு.! அட.. அவர்கள் பேசிய டாபிக்தான் வேறலெவல்!!
தல எப்பவுமே வேற லெவல்தான்! என்னவொரு மனசு.. வீடியோவை கண்டு புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!!
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் துவங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் திரையுலகப் பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
தல அஜித் மற்றும் ஷாலினி இருவரும் திருவான்மியூரில் தங்களது வீட்டிற்கு அருகில் உள்ள வாக்குச்சாவடியில் காலையிலேயே வாக்களித்தனர். அங்கு அவரை கண்டதும் ரசிகர்கள் கோஷமிட்டு ஆரவாரம் செய்து அவருடன் செல்பி எடுக்க முயன்றனர். மேலும் அப்பகுதியில் கூட்டம் கூடியது. இந்நிலையில் ரசிகர் ஒருவர் முககவசம் அணியாமல் தல அஜித்துடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார்.
தல உடன் செல்பி எடுக்க முயன்ற அந்த ரசிகர் முக்கவசம் அணியாமல் இருந்தார் கொரனா கால கட்டத்துல இதை அனுமதித்தால் இது தவறான முன்னுதாரணமாக அமையும் அதை கருத்தில் கொண்டு தல அவருக்கு அறிவுறுத்தி மொபைல் திருப்பி கொடுத்தார் எப்போதும் தப்பான முன்னுதாரணமாக இருக்க கூடாது என்று கவனமாக உள்ளார் தல pic.twitter.com/GuXhdz2qrN
— Joe Selva (@joe_selva1) April 6, 2021
இதனால் கடுப்பான அஜித் அவரது செல்போனை பிடுங்கி தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டு அங்கிருந்து அவர்களை போக சொன்னார். பின்னர் வாக்குச்சாவடியில் செல்போனை பயன்படுத்த கூடாது. மாஸ்க் அணியுங்கள். சாரி என மன்னிப்பு கேட்டு செல்போனை திருப்பிக் கொடுத்துள்ளார். மேலும் அங்கிருந்த சிலரிடமும் சாரி கேட்டு விட்டு சென்றுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக தல எப்பொழுதுமே வேற லெவல் தான் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
என்ன மனுஷன் யா தல ❤❤❤
— தல அரவிந்த்5.0 (@thalaaravinth43) April 6, 2021
ரசிகன்கிட்ட சாரி கேட்டு போறாரு
மேன்மக்கள் மேன்மக்களே#Valimai #Thala pic.twitter.com/zv4NilHDKQ