தமிழ் நடிகை விஷம் கொடுத்து கொலை முயற்சி., வில்லன் நடிகரின் பதறவைக்கும் செயல்.! காரணம் இதுதான்.. நடிகை மரண வாக்குமூலம்..!!
கோலிவுட்டில் நடிகர் விஷால் நடித்த "தீராத விளையாட்டு பிள்ளை" படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் தனுஸ்ரீ தத்தா நடிகையாக நடித்துள்ளார். மேலும் இவர் ஹிந்தி, தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் இந்தி நடிகர் நானே படேகர் மற்றும் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சாரியா இருவரும் தனக்கு பாலியல் தொல்லையளித்ததாக குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
மேலும் இந்தி திரையுலக மாபியாக்கள் பல வழிகளில் தனக்கு தொல்லை கொடுத்ததாகவும் தெரிவித்து இருந்தார். எனது உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் அதற்கு நானே படேகர்தான் காரணம் என்றும் கூறினார். இந்த நிலையில் தனுஸ்ரீ தத்தா மீண்டும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் அளித்துள்ளார்.
இது குறித்து அளித்துள்ள பேட்டியில், "என்னை கொலை செய்ய பல முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. விபத்தை ஏற்படுத்தும் நோக்கோடு கார் பிரேக்குகள் பலமுறை சேதப்படுத்தப்பட்டு இருந்தன. ஒருமுறை விபத்தில் சிக்கி காயமடைந்தேன். எனக்கு விஷம் கொடுக்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன" என்று கூறியுள்ளார்.