அதை எதிர்பார்க்கவே இல்லை! அலறியடித்து சூப்பர் ஸ்டார் நடிகரின் முதுகில் தாவிய நடிகை ராதிகா! ஏன்? அப்படி என்ன நடந்தது??

அதை எதிர்பார்க்கவே இல்லை! அலறியடித்து சூப்பர் ஸ்டார் நடிகரின் முதுகில் தாவிய நடிகை ராதிகா! ஏன்? அப்படி என்ன நடந்தது??


actress-radhika-shares-her-shooting-experience

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சமீபகாலமாக ஓடிடி தளத்தில் சிறு பட்ஜெட் முதல் பெரிய படங்கள் வரை ஏராளமான படங்கள் வெளிவருகின்றன. மேலும் அத்தகைய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஓடிடி தளங்களும் அதிகரித்து வருகிறது.

தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரும், நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்த் ஆஹா என்ற பெயரில் ஒடிடி தளத்தை தொடங்கியுள்ளார். சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ஆஹா தளத்தின் அறிமுக விழாவில் திரைபிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

snake

விழாவில் கலந்து கொண்ட நடிகை ராதிகா பேசுகையில், அல்லு அரவிந்த் சார் என்னையும் சிரஞ்சீவியும் வைத்து படம் ஒன்றை தயாரித்துள்ளார். அதில் நான் பாம்புடன் நடிக்க வேண்டும். ஆனால் பாம்பு என்றால் எனக்கு மிகவும் பயம். அதனால் முதலில் மறுத்துவிட்டேன்  ஆனால் அல்லு அரவிந்த் சார் அதெல்லாம் ஒன்றுமில்லை, நீ வந்து நடி என்றார்.

நானும் ஒரு பாம்புதானே என்று சென்ற போது சுமார் 1000 பாம்புகளை திறந்துவிட்டனர். இதனால் செம கோபமாகி நான் கண்டபடி தகாத வார்த்தையில் அவர்களை திட்டினேன். ஆனால் அல்லு அரவிந்த் சார் ஒரு நிமிடம் வாயை மூடி நில் என்று கூறினார். அப்பொழுது என்னை சமாதானம் செய்ய சிரஞ்சீவி வந்தபோது, நான் அவரது முதுகில் ஏறிக்கொண்டு என்னை எப்படியாவது வெளியில் கூட்டி செல்லுங்கள் என்று கத்த ஆரம்பித்தேன். இந்த சம்பவத்தை என்னால் மறக்க முடியாது என கூறியுள்ளார்.