"இது நடந்தா நான் அரசியலுக்கே வரமாட்டேன்.!" -விஷால் விட்ட சவால்.!
மீண்டும் அப்பாவானார் நடிகர் கார்த்தி! என்ன குழந்தை தெரியுமா? செம ஹேப்பியாக அவரே வெளியிட்ட சூப்பர் தகவல்!
மீண்டும் அப்பாவானார் நடிகர் கார்த்தி! என்ன குழந்தை தெரியுமா? செம ஹேப்பியாக அவரே வெளியிட்ட சூப்பர் தகவல்!
தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாதுறையில் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. அதனைத் தொடர்ந்து அவர் பையா, ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை, மெட்ராஸ், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி எனப் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் அவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துவருகிறார். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் நடிகர் கார்த்தி கடந்த 2011-ம் ஆண்டு ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு உமையாள் பெண்குழந்தை பிறந்தது.
Dear friends and family, we are blessed with a boy baby. We can’t thank enough our doctors and nurses who took us through this life changing experience. 🙏🏽 need all your blessings for the little one. Thank you god!
— Actor Karthi (@Karthi_Offl) October 20, 2020
அதனைத்தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்தியின் மனைவி ரஞ்சனி மீண்டும் கர்ப்பமாக உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது நடிகர் கார்த்திக்கு இரண்டாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை மிகவும் மகிழ்ச்சியுடன் நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.