18 வயது இளம்பெண்ணின் கர்ப்பத்துக்கு 10 ஆம் வகுப்பு மாணவன் காரணமா..! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

18 வயது இளம்பெண்ணின் கர்ப்பத்துக்கு 10 ஆம் வகுப்பு மாணவன் காரணமா..! வெளியான அதிர்ச்சி தகவல்..!!



18-years-old-girl-praganent-10th-student

18 வயது இளம்பெண் போலீசாரிடம் தெரிவித்த தகவலால் கீரிப்பாறை உட்பட கன்னியாகுமரி பகுதியே பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே உள்ளது ஒரு மலைக்கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வந்த 18 வயது நிரம்பிய இளம்பெண்ணுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பெண்ணின் உறவினர்கள் அருகிலுள்ள  ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.

அங்கு அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர் எங்க இந்த பெண்ணின் கணவர் வந்து இருக்கிறாரா இல்லையா இந்த பெண் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்று கேட்க உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் அப்பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவலை மருத்துவருக்கு உறவினர்கள் தெரிவிக்க, அது ஒரு அரசு மருத்துவமனை என்பதால் மருத்துவர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். 

தகவலறிந்த கீரிப்பாறை போலீசார் அந்தப் பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில் அந்தப் பெண் தெரிவித்த தகவலால் அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் அந்தப் பெண்ணின் கற்பத்துக்கு காரணம் ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் என்று அந்தப் பெண் தெரிவித்தார். இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.