100 வயது பாட்டியையும் விட்டுவைக்காத காமக்கொடூரன்; வெளியான அதிர்ச்சி சம்பவம்.

100 வயது பாட்டியையும் விட்டுவைக்காத காமக்கொடூரன்; வெளியான அதிர்ச்சி சம்பவம்.


100-yers-old-lady-rabe-20-yrs-youth

இன்றைய சூழலில் பாலியல் வன்கொடுமைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது . அதிலும் குறிப்பாக சிறுமிகள், பள்ளி மாணவிகள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அரிதினும் அரிதான யாருமே எதிர்பார்க்க முடியாத நூறு வயது பாட்டியை 20 வயது இளைஞர் ஒருவர் கொடூரமாக கற்பழித்த நிகழ்வும் அரங்கேறி உள்ளது.

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள கங்கா பிரசாத்பூர் என்ற பகுதியில் 100 வயது மூதாட்டி ஒருவர் தனது உறவினர்களுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவர்களது வீட்டிற்கு அருகில் அபிஜித்(20 ) என்ற இளைஞரும் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அபிஜித் கடந்த திங்கட்கிழமை இரவு மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்து அவரை கொடூரமாக கற்பழித்துள்ளார். இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அவனை கடுமையாக தாக்கி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.