முத்தம் கேட்ட காதலனின் நாக்கை கடித்து துண்டாக்கிய இளம்பெண்!
முத்தம் கேட்ட காதலனின் நாக்கை கடித்து துண்டாக்கிய இளம்பெண்!
பார்சிலோனா நாட்டை சேர்ந்த லோபஸ் என்ற இளம்பெண் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி இளைஞர் ஒருவரின் மீது காதல் வலையில் விழுந்துள்ளார். இவர்களுடைய காதல் அடுத்த இரண்டு மாதத்திலே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்து சென்றுள்ளனர்.
இந்தநிலையில் மீண்டும் சில நாட்களிலே அந்த பெண்ணை தேடிவந்த இளைஞர், மீண்டும் அவரது காதலை புதுப்பித்துள்ளார். இதனையடுத்து 4 மாதங்கள் நெருக்கமாக இருந்துவிட்டு மீண்டும் பிரிந்து செல்ல இளைஞர் முடிவெடுத்து அவரது காதலியிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த லோபஸ், காதலனை கட்டிப்பிடித்துக்கொண்டு கடைசியாக ஒரு முத்தம் கொடுக்குமாறு கேட்டுள்ளார். உடனே அந்த இளைஞரும் முத்தம் கொடுக்க வந்துள்ளார். அப்போது லோபஸ் திடீரென இளைஞரின் நாக்கை கடித்து துண்டாக்கியுள்ளார்.
அவருடைய வாயிலிருந்து அதிக ரத்தம் வெளியேறுவதை பார்த்ததும், லோபஸ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அந்த இளைஞரின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் தகவலறிந்த போலீசார் லோபஸை கைது செய்தனர்.