நெகிழ்ச்சி வீடியோ! அடிபட்டு கிடந்த கரடியை மீட்க போராடும் மூன்று கரடிகள்.
நெகிழ்ச்சி வீடியோ! அடிபட்டு கிடந்த கரடியை மீட்க போராடும் மூன்று கரடிகள்.
பொதுவாக இரக்ககுணம் என்பது மனிதர்களையும் தண்டி அணைத்து உயிரின்களுக்கும் பொதுவான ஒன்றாக உள்ளது. ஆறு அறிவு படைத்த மனிதன் கூட பல நேரங்களில் மற்றொரு மனிதன் உயிருக்கு போராடும்போது கண்டுகொள்ளாமல் போவது, செல்பி எடுப்பது இப்படி பல நேரங்களில் கேள்விப்பட்டிருப்போம்.
அதே நேரத்தில், இறந்த ஒரு குரங்கிற்காக மற்ற குரங்குகள் கண்ணீர் வடிப்பது, ஒரு காகம் இறந்துவிட்டால் அதை மற்ற காகங்கள் பாதுகாப்பது இப்படிப்பட்ட சம்பவங்களையும் நாம் பார்த்திருப்போம்.
அந்த வகையில், அமெரிக்காவில் சாலையில் சென்றுகொண்டிருந்த கரடி ஒன்றின் மீது கார் மோதியதில் அந்த கரடி நடக்க முடியாமல் ரோட்டில் கிடந்தது தவிக்கிறது. இதனை பார்த்த மற்ற மூன்று கரடிகள் ரோட்டில் அடிபட்டு கிடக்கும் கரடியை தங்கள் வாயால் இழுத்து சென்று காட்டுக்குள் விடுகிறது.
இந்த கட்சியை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்னனர். விலங்காக இருந்தாலும்கூட மற்றொரு விலங்கிற்கு உதவி செய்யும் அந்த கரடிகளின் செயல் அனைவரும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.