வயிறு வலியால் மருத்துவமனை சென்ற ஆணுக்கு ஆண் குழந்தை பிறந்தது..! வினோத சம்பவம்..!
வயிறு வலியால் மருத்துவமனை சென்ற ஆணுக்கு ஆண் குழந்தை பிறந்தது..! வினோத சம்பவம்..!
இலங்கையில் உள்ள மாத்தறை என்னும் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு வயிறு வலிப்பதாக கூறி ஆண் ஒருவர் கடந்த வாரம் சென்றுள்ளார். பார்ப்பதற்கு தாடி, மீசை என ஆண்போல் தோற்றமளித்த அவரை மருத்துவர் ஆண்கள் வார்டுக்கு அனுப்பியுள்ளார்.
அங்கு இவரை சோதித்த மருத்துவர், அந்த நபரின் வயிற்றில் குழந்தை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், குழந்தை எந்நேரத்திலும் பிறக்கும் தருவாயில் இருந்துள்ளது. பின்னர் இதுகுறித்து அவரிடம் விசாரித்ததில், பெண்ணாக பிறந்து பின்னர் உடலில் ஏற்பட்ட கார்மோன் மாற்றங்களால் அவர் ஆணாக வாழந்துவந்தது தெரியவந்துள்ளது.
அவர் மனதளவில் ஆணாக இருந்தாலும் உடல் அளவில் ஒரு பெண் தான். அதனால் அறிவியல் ரீதியாக அவரால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து பிரசவ வார்டில் சேர்க்கப்பட்ட அவருக்கு அழகான ஆண் குழந்தை ஓன்று பிறந்துள்ளது.
ஆனால், அந்த குழந்தையை தான் வளர்க்க விருப்பம் இல்லை என அந்த நபர் தெரிவித்துவிட்டதாகவும், தற்போது மருத்துவமனை அந்த குழந்தையை கண்காணித்து வருவதாகவும், ஆட்டோ ஓட்டுநராக உள்ள அவரின் பெயர் உள்ளிட்ட தகவல்களை மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.