குவைத் விமான நிலையத்தை தரைமட்டமாக்கிய ஈரான் ட்ரோன்! இந்தியர் பலியான கொடூர சிசிடிவி காட்சி....!!!
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 1 (T1) பகுதியில் ஜூன் 3-ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாகவும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவத்துக்குப் பிறகு வளைகுடா நாடுகளில் பாதுகாப்பு அச்சம் மேலும் அதிகரித்துள்ளது.
வெளியான சிசிடிவி காட்சிகள்
குவைத் சிவில் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் வெளியிட்டுள்ள காணொளியில், தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் தருணம் பதிவாகியுள்ளது. அதன்பின் முனையப் பகுதியில் புகை சூழ்ந்ததுடன், அங்கிருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி அவசரமாக ஓடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
தகவலின்படி, தாக்குதலுக்குப் பிறகு மீட்புப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்தவரின் அடையாளம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: வேகமாக ஓடுங்க....சைடுல போங்க! கத்தாரில் விழுந்த வெடித்த ஏவுகணை! "ஓ மை காட்" இந்தியர் அலறல் சத்தம்... திக் திக் காட்சி!!!
தாக்குதலுக்கு யார் காரணம்?
இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவின் CENTCOM மற்றும் குவைத் பாதுகாப்பு அமைச்சகம், அமெரிக்கா நடத்திய நடவடிக்கைகளுக்கு பதிலடியாக ஈரான் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளன. ஆனால் அந்த குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது.
தங்கள் தரப்பில் எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை என்றும், அமெரிக்காவின் ஏவுகணை இடைமறிப்பு அமைப்பில் ஏற்பட்ட கோளாறே சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் ஈரான் விளக்கம் அளித்துள்ளது.
குவைத்தின் அதிரடி நடவடிக்கை
குற்றச்சாட்டுகள் மற்றும் பதிலடி விளக்கங்கள் மத்தியில், குவைத் அரசு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதையடுத்து இரண்டு ஈரானிய தூதர்கள் 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கை காரணமாக வளைகுடா பகுதியில் ஏற்கனவே நிலவி வந்த பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளின் அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழல் தற்போது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
اللحظات الأولى للاعتداء الإيراني الغاشم من قبل المسيرات الذي تعرض له مبنى الركاب T1 في مطار الكويت الدولي بتاريخ 3 يونيو 2026 وتسبب بخسائر بالأرواح وإصابات بشرية بليغة وأضرار مادية جسيمة
The first moments following the brutal Iranian drone attack on Terminal 1 (T1) at Kuwait… pic.twitter.com/eTzQoVXB4K
— الطيران المدني (@Kuwait_DGCA) June 3, 2026
இதையும் படிங்க: குவைத் வானில் அமெரிக்க போர் விமானங்கள் வெடித்து சிதறல்! வைரலான அதிர்ச்சி வீடியோ..!!