#Breaking: தறிகெட்டு இயங்கி 20 பயணிகளுடன் ஆற்றில் விழுந்த பேருந்து; பலர் பலி, அதிர்ச்சி காட்சிகள் உள்ளே.!



in-russia-st-petersburg-bus-fallen-into-river

ரஷியா நாட்டில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில், பேருந்து ஒன்று 20 பயணிகளுடன் பயணம் செய்தது. இந்நிலையில், ஆற்றின் அருகே சென்றுகொண்டு இருந்த பேருந்து, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரியவருகிறது. 

ஆற்றுக்குள் பாய்ந்த பேருந்து:

இதனால் தறிகெட்டு இயங்கிய பேருந்து, எதிர்திசையில் வந்த காரின் மீது மோதியது. பின் அதிவேகத்தில் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஆறில் மூழ்கி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

6 பேரின் நிலை என்ன?

மீட்பு படையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்குள், பயணிகளில் சிலர் நீரில் தத்தளித்து மயங்கி இருக்கின்றனர். இதனால் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் மயக்க நிலையிலேயே இருப்பதால் உயிர்பலி அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

குற்றவிசாரணை நடைபெறுவதாக அறிவிப்பு:

பேருந்து விபத்தில் சிக்கியது எப்படி? கட்டுப்பாட்டை இழந்ததா? அல்லது விஷமிகளின் செயலா? என குற்ற விசாரணையும் நடைபெற்று வருவதாக அங்குள்ள நிலவரங்கள் தெரிவிகின்றன.

இதையும் படிங்க: சிறுமியை கடித்துக்குதறி கொலை செய்ய முயன்ற நாய்கள்: அலட்சியமாக செயல்படும் பெற்றோர்களே உஷார். அதிர்ச்சி வீடியோ வைரல்.!