அமைச்சர் முகத்தை பாருங்க... அப்டி ஒண்ணுமே தெரியல! ஏடிஎம் கார்டை எடுத்து அதே மாதிரி மாத்திரையை நுனுக்கி காட்டட்டும்.. அப்பதான் நம்புவோம்..! புட்டு புட்டு வைத்த கீதா ஜீவன் வீடியோ..!!!



geetha-jeevan-demands-action-against-minister-sarathkum

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், அமைச்சர் விஸ்வநாதன் மற்றும் அமைச்சர் சரத்குமார் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். குறிப்பாக பள்ளி மாணவிகள் தொடர்பான விவகாரமும், ஐபிஎல் போட்டியின்போது வெளியான வீடியோவும் குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.

மாணவிகளை தொட்ட விவகாரத்தில் கேள்வி

பள்ளி மாணவிகளின் கால்களை தொட்டு சுளுக்கு எடுத்ததாக கூறப்படும் விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கீதா ஜீவன் தெரிவித்தார். முதலுதவி அளிக்க வேண்டிய அவசியம் இருந்திருந்தால், அங்கு இருந்த பெண் ஆசிரியையிடம் மாணவிகளுக்கு உதவுமாறு கூறியிருக்கலாம் என்றும், மாணவிகளின் கால்களை தொடுவதற்கு யார் அதிகாரம் வழங்கியது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: முதல்வரின் முக்கிய இலக்கே இதுதான்! தமிழகத்தில் ஊழலுக்கு இனி இடமில்லை... அமைச்சர் செங்கோட்டையன் போட்ட அதிரடி உத்தரவால் ஆடிப்போன அதிகாரிகள்..!!!!

சரத்குமார் விளக்கத்துக்கு எதிர்ப்பு

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் போட்டியின்போது வெளியான வீடியோ குறித்து அமைச்சர் சரத்குமார் அளித்த விளக்கத்தையும் கீதா ஜீவன் விமர்சித்தார். தனது குழந்தைக்கு அப்போது ஒரு வயதுதான் இருந்தது, மாத்திரையை நுணுக்கி கொடுப்பதற்காகவே அவ்வாறு செய்தேன் என்ற அவரது விளக்கம் ஏற்க முடியாதது என்றார்.

குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தால் அவர் ஏன் ஐபிஎல் போட்டிக்கு சென்றார் என்றும், அந்த நேரத்தில் குழந்தை குறித்து எந்தவித கவலையும் அவரது முகத்தில் தெரியவில்லை என்றும் கீதா ஜீவன் கூறினார். உண்மையிலேயே மாத்திரையை நுணுக்கிக் கொடுத்ததாக கூறினால், அதேபோல் மீண்டும் செய்து பொதுமக்களுக்கு விளக்கமாக காட்ட வேண்டும் என்றும் அவர் சவால் விடுத்தார்.

மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும்

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பொதுவாக மருத்துவமனைகளில் சிரப்பே வழங்கப்படும், மாத்திரைகள் கொடுப்பது வழக்கமல்ல என்றும் கீதா ஜீவன் குறிப்பிட்டார். மேலும், போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்றால் அமைச்சர் மருத்துவ பரிசோதனைக்கு உட்பட்டு தனது தரப்பை நிரூபிக்க வேண்டும் என்றார்.

அதேபோல், குழந்தையின் உடல்நிலை சரியில்லாத சூழலில் வெளியான அந்த வீடியோவுக்கு 'தக்கலைப்' என்ற தலைப்பு ஏன் வைக்கப்பட்டது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அமைச்சர் சரத்குமார் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக வழக்கு பதிவு செய்து, தமிழக முதலமைச்சர் விஜய் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கீதா ஜீவன் வலியுறுத்தினார்.

 

இதையும் படிங்க: என்ன இப்படி சொல்லிட்டாரே.... தவெகவினருக்கு அதிர்ச்சி கொடுத்த காங்கிரஸ் அமைச்சர்! பரபரப்பு வீடியோ..!!!