உன் தங்கச்சினா என்ன செஞ்சிருப்ப? திடீரென பரபரப்பான தமிழா தமிழா!! வைரல் வீடியோ.
கொரோனா வைரஸ் தாக்குதல்! சிகிச்சையளித்த மருத்துவருக்கு நேர்ந்த கதி! பீதியில் மக்கள்!

சீனாவில் தற்போது கொடிய கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரையில் சீனாவில் 26 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 830க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தக் கொடிய வைரஸ் சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவி வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் முதன்முதலில் பரவிய வுஹான் நகரம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கிருந்து யாரும் மற்ற நகரங்களுக்கோ, மற்ற நகரத்தில் இருந்து வுஹானுக்கு செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வைரஸை கட்டுப்படுத்த மருத்துவ குழுக்கள் அனைவரும் தீவிரமாக போராடி வருகின்றனர். இதில் வுஹான் நகரில் ஹூபியின் சின்ஹியா மருத்துவமனையில் பணியாற்றிவந்த லியாங் உடோங் என்பவர் முதன்மை மூத்த மருத்துவராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் அவர் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.