ஐயோ... கடவுளே.! வரதட்சணை கொடுமையால் நடந்த கொடூரம்! 5-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த புதுப்பெண்... யார் காரணம்? குலை நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்...!!!



delhi-uttam-nagar-dowry-death-kushi

டெல்லியின் உத்தம் நகர் பகுதியில் 5-வது மாடியில் இருந்து விழுந்து 20 வயதான குஷி உயிரிழந்தார். திருமணத்துக்குப் பிறகு கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்தியதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். குஷி தற்கொலை செய்யவில்லை என்றும், அவரை மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்திருக்கலாம் என்றும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

5-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த இளம்பெண்

உத்தம் நகர் பகுதியில் உள்ள கட்டிடத்தில் குஷி கீழே விழுந்து உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு, சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: பட்டம் விட்ட 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்! 4 நாட்களுக்குப் பின் பெற்றோற்கு காத்திருந்த அதிர்ச்சி....!!!

வரதட்சணைக் கொடுமை என பெற்றோர் குற்றச்சாட்டு

திருமணத்துக்குப் பிறகு கூடுதல் வரதட்சணை கேட்டு குஷியை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்து துன்புறுத்தியதாக பெற்றோர் கூறியுள்ளனர். மேலும், அவர் மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொள்ளவில்லை என்றும், வரதட்சணைக் கொடுமை காரணமாக அவரை கீழே தள்ளியிருக்கலாம் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் போலீசார்

குஷியின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பதை உறுதி செய்ய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. குஷியின் கணவர் மற்றும் குடும்பத்தினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி, கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

 

இதையும் படிங்க: வாய் பேச முடியாத மகனை எழுத்தால் பேசவைத்த பாசமிகு அன்புத்தாய்.. கல்வி கொடுத்த அசத்தல் ஐடியா..!