நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
அதிர்ச்சி! அதிகாலையில் லாரி மீது தனியார் பேருந்து மோதி பயங்கர விபத்து! 6 பேர் உயிரிழப்பு... பகீர் காட்சிகள்...!!!
தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை அருகே இன்று அதிகாலை தனியார் பயணிகள் பஸ் லாரி மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். ஹைதராபாத்தில் இருந்து விஜயவாடா நோக்கிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானது. இதில் பலர் காயமடைந்துள்ளனர்.
லாரி மீது வேகமாக மோதிய பஸ்
ஹைதராபாத்தில் இருந்து விஜயவாடா நோக்கி 43 பயணிகளுடன் தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. சூர்யாபேட்டை அருகே இன்று அதிகாலை 5.20 மணியளவில் முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது பஸ் பலமாக மோதியது. மோதலின் தாக்கத்தில் பஸ்சில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்தனர்.
இதையும் படிங்க: கள்ளக்காதலால் கதிக்கலங்கிய குடும்பம்! மனைவியை கொடூரமாக தாக்கி.... 2 குழந்தைகளுடன் ஓட்டம் பிடித்த கணவன்! பகீர் சம்பவம்...!!!
6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
விபத்தில் சிக்கிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பல பயணிகள் காயமடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெளிவான தகவல் வெளியாகவில்லை.
மீட்புப் பணியில் போலீசார்
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன. இதையடுத்து போலீஸ் விசாரணை தொடங்கியுள்ளது.
A horrible road accident in Telangana's Suryapet has killed 6 people, while many others are injured. A private bus travelling from Hyderabad to Vijayawada rammed into a moving truck at nearly 5.20 am today. There were a total of 43 passengers on the bus at the time of the… pic.twitter.com/NwYCYHjPur
— Vani Mehrotra (@vani_mehrotra) August 26, 2026
இதையும் படிங்க: மக்களே உஷார்! திடீரென ஓடிக்கொண்டிருந்த மின்சார ஸ்கூட்டர் வெடித்து... தீப்பிடித்து எரிந்தது! நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி!!!