23 வயதிலேயே இப்படி ஒரு பிளானா? முதலில் நண்பனின் மனைவி! அடுத்து IRS அதிகாரியின் மகள்! கள்ளச்சாவி போட்டு காமக்கொடூரன் செய்த பலாத்காரம்... இறுதியில் சார்ஜர் கேபிளால் கழுத்தை... நெஞ்சை உலுக்கும் பயங்கரம்..!!
டெல்லியில் IRS அதிகாரியின் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். ராகுல் மீனா (23) என்ற இளைஞரை போலீஸார் பிடித்துள்ளனர். விசாரணையில், அவர் ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் தொடர்ச்சியாக நிகழ்த்திய கொடூரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்த வழக்கு தற்போது தீவிரமாக விசாரிக்கப்படுகிறது.
ராஜஸ்தானில் தொடங்கிய குற்றச்செயல்
தகவலின்படி, ராஜஸ்தான் மாநிலம் ராஜ்கர் பகுதியைச் சேர்ந்த ராகுல், ஏப்ரல் 21 அன்று நண்பருடன் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கிருந்து வெளியேறிய அவர், நேரடியாக நண்பரின் வீட்டுக்குச் சென்று, அவரது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் கொலை முயற்சி செய்து அங்கிருந்து தப்பியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ராஜஸ்தான் போலீஸார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
டெல்லி வருகை... திட்டமிட்ட தாக்குதல்
அதன்பின், மும்பை–டெல்லி விரைவுச் சாலையில் சென்ற ஆம்புலன்ஸை வழிமறித்து, ஏப்ரல் 22 அதிகாலை டெல்லி வந்ததாக கூறப்படுகிறது. முன்பு டெல்லியில் IRS அதிகாரியின் வீட்டில் வேலை செய்த அனுபவம் இருந்ததால், குடும்பத்தின் அன்றாட பழக்கங்கள் அவருக்குத் தெரிந்திருந்தது. வேலை இழந்த பின்னரும் அந்த தகவலை பயன்படுத்தியுள்ளார்.
வீட்டுக்குள் நுழைந்து கொடூரம்
நேற்று காலை 6.30 மணியளவில் அதிகாரியும் மனைவியும் வெளியேறிய நேரத்தை கண்காணித்து, கள்ளச் சாவி மூலம் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அங்கு தனியாக இருந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, செல்போன் சார்ஜர் கேபிளால் கழுத்தை இறுக்கி கொன்றுள்ளார். பின்னர் ரூ.2 லட்சம் பணமும் நகைகளும் எடுத்து தப்பிச் சென்றுள்ளார். இந்த Delhi murder case சம்பவம் அங்கிருந்த CCTV காட்சிகளில் பதிவாகியிருந்தது.
அதிரடி வேட்டை... கைது
இதையடுத்து டெல்லி மற்றும் ராஜஸ்தான் போலீஸார் இணைந்து நடத்திய விசாரணையில், Rahul Meena கைது செய்யப்பட்டார். அவரது செயல்கள் கடுமையான வன்மத்துடன் இருந்ததாக போலீஸார் கூறினர். பாதுகாப்பு அதிகம் உள்ள குடியிருப்பு பகுதியில் நடந்த இந்த கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவரிடம் தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.