கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம்! அதிகரித்துவரும் பலி எண்ணிக்கை! இதுவரை எவ்வளவு தெரியுமா?
கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம்! அதிகரித்துவரும் பலி எண்ணிக்கை! இதுவரை எவ்வளவு தெரியுமா?
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நேற்று ஒரே நாளில் 110 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 1770ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து இந்த கொடூர வைரஸ் நாடு முழுவதும் பரவியது. ஆனாலும் சைனாவில் கொரோனா வைரஸ் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் கொரோனா தாக்குதல் காரணமாக சீனாவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 100க்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 110 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 1770ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான பணியில், உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவர் குழுவுடன், சீன மருத்துவ நிபுணர்கள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை மீட்க சரியான மருந்து கண்டறியப்படவில்லை என்பதாலே பலி எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியமால் மருத்துவர்கள் திணறி வருகின்றனர். இதனால் வைரஸ் தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் மருத்துவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.