கடுமையான கல்வியால் மன அழுத்தம்.. மாணவர்களின் தற்கொலை விகிதம் அதிகரிப்பு; நெஞ்சை பதறவைக்கும் தகவல்.!

கடுமையான கல்வியால் மன அழுத்தம்.. மாணவர்களின் தற்கொலை விகிதம் அதிகரிப்பு; நெஞ்சை பதறவைக்கும் தகவல்.!



  China CDC Students Suicide 

 

இன்றளவில் பல நாடுகளிலும் கடுமையான கல்வி முறை இருக்கிறது. அவை சில ஸ்மார்ட் வகுப்புகளாகவும் நடைபெறுகின்றன. 

சமீபத்தில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் நடத்திய ஆய்வில், சீனாவில் கடுமையான கல்விமுறையின் காரணமாக 15 முதல் 35 வயது உட்பட்டோர் அதிக அளவில் தற்கொலை செய்வது தெரிய வந்துள்ளது. 

இதனை தவிர்த்து கடந்த 2019 வரை ஐந்து முதல் 14 வயதான மாணவர்களின் தற்கொலை விகிதமும் 5% அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாக இருக்கிறது. 

மேலும், சீன அரசு இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், நெட்டிசன்கள் இது சீனாவில் மட்டும் நடப்பதில்லை, பரவலான மேலை நாடுகளிலும் நடக்கிறது. 

இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.