அலுவலகத்தில் போலீஸ் உடையில் பெண்ணுடன் ஒரே குஜால் ! டிஜிபி-யின் ரகசிய லீலை வீடியோ வெளியாகி அதிர்ச்சி..!!!
கர்நாடக காவல்துறை வட்டாரங்களில் தற்போது பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ள சம்பவம் ஒன்று அரசியல் மற்றும் சமூக தளங்களில் தீவிர விவாதத்துக்குரியதாக மாறியுள்ளது. டிஜிபி அலுவலகத்திற்குள் பெண்களுடன் முறையற்ற முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் காணொளி வெளியானதைத் தொடர்ந்து, மூத்த போலீஸ் அதிகாரிகளின் ஒழுக்கம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
வெளியான சர்ச்சை காணொளி
கர்நாடக மாநிலத்தில் குடிமை உரிமைகள் அமலாக்க இயக்குநரகத்தின் காவல்துறை தலைமை இயக்குநராக பணியாற்றும் டிஜிபி பதவி வகிக்கும் ஐபிஎஸ் அதிகாரி டாக்டர் ராமச்சந்திர ராவ் இந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அலுவலகத்திற்குள் ரகசியமாக பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவில், அவர் பெண்களுடன் நெருக்கமாக பழகும் காட்சிகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேலை நேரத்தில் நடந்த சம்பவம்
வட்டாரங்களின் தகவலின்படி, அந்தப் பெண் பல்வேறு நாட்களில் அலுவலகத்திற்கு வந்ததாகவும், ஒவ்வொரு முறையும் வேறு வேறு உடைகளை அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ சீருடையில், பணியில் இருந்தபோதும் அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் காட்சிகள் தற்போது கர்நாடக DGP தொடர்பான சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
கண்ணியம் குறித்து எழும் கேள்விகள்
அந்தப் பெண் கட்டாயப்படுத்தப்பட்டார் என்ற குற்றச்சாட்டு எதுவும் முன்வைக்கப்படாத போதிலும், ஒரு மூத்த போலீஸ் அதிகாரியிடமிருந்து எதிர்பார்க்கப்படும் கண்ணியம், ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளை மீறியதாக பலரும் விமர்சனம் முன்வைத்து வருகின்றனர். இந்தச் சம்பவம் IPS Officer Controversy என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ரகசிய பதிவு யார் செய்தது?
இந்தக் காட்சிகளை யார் ரகசியமாக பதிவு செய்தார் என்பது குறித்தும், அந்தப் பெண்ணே திட்டமிட்டு இதைச் செய்திருக்கலாமா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், மிரட்டிப் பணம் பறிக்கும் நோக்கத்திலோ அல்லது அதிகாரியின் பெயருக்கு களங்கம் விளைவிக்க திட்டமிட்டோ இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனால், கர்நாடக காவல்துறையின் நம்பகத்தன்மை மற்றும் மூத்த அதிகாரிகளின் நடத்தை குறித்து பொதுமக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக அரசு தரப்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தற்போது டிஜிபி சர்ச்சை என்ற பெயரில் பரவிவரும் இந்த சம்பவம், அதிகாரிகளின் ஒழுக்கத்தை உறுதி செய்யும் விதமான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
A fresh controversy has erupted in #Karnataka after a video allegedly showing a DGP-rank IPS officer engaging in inappropriate behaviour with women inside his office surfaced in the public domain.
Unlike earlier scandals involving political figures, this episode reportedly… pic.twitter.com/pQszE1jyeR
— Hate Detector 🔍 (@HateDetectors) January 19, 2026