மாமியாரின் மாஸ்டர் பிளானால் பரிதாபமாக இறந்த மருமகள்! காரணம் என்ன? அதிர்ச்சி சம்பவம்...

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம், அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குழந்தை இல்லாததை காரணமாக்கி, ஒரு மாமியார் தனது மருமகளை கல்லால் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை சம்பவம் பெலகாவி மாவட்டம் அதானி தாலுகா பல்லிகேரி-மலாபாத் சாலையில் நடைபெற்றது. இறந்தவர், ரேணுகா சஞ்சய் ஹோனகண்டே (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
போலீஸ் விசாரணைகளின்போது, ரேணுகாவின் மாமனார் கமன்னா ஹோனகண்டே மற்றும் மாமியார் ஜெயஸ்ரீ ஆகியோர், அவரை பைக்கில் அழைத்துச் சென்றதாகவும், பின்னர் கல்லால் அடித்து கொன்றுவிட்டு, அந்த இடத்தில் பைக்குடன் உடலை பதித்து விபத்தில் மரணமடைந்தது போல நாடகம் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பெற்ற குழந்தையை கழிவறைக்குள் அழுத்தி கொன்ற கொடூர தாய்! திடுக்கிடும் சம்பவம்...
இச்சம்பவம் தொடர்பாக அதானி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பெற்ற குழந்தையை கழிவறைக்குள் அழுத்தி கொன்ற கொடூர தாய்! திடுக்கிடும் சம்பவம்...