மரத்தின் கிளை நுனியில் குழந்தைகளுடன் உயிருக்குப் போராடும் தாய்...! தப்பிக்க முடியாமல் தவிக்கும் நிலை... நெஞ்சை பதறவைக்கும் காட்சி!!!
அசாமில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள அசாம் வெள்ளம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய தாயும் அவரது குழந்தைகளும் மரத்தின் மீது ஏறி உயிர் தப்பிக்க முயலும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி, பலரையும் பதற வைத்துள்ளது.
மரத்தின் மீது தஞ்சமடைந்த குடும்பம்
வெள்ளநீர் வீடுகளின் கூரையை எட்டும் அளவுக்கு உயர்ந்ததால், பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல முடியாமல் பலர் மரங்களில் ஏறி தஞ்சமடைந்துள்ளனர். வெளியான காணொளியில், தனது குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க தாய் ஒருவர் மரக்கிளையைப் பற்றிக்கொண்டு காத்திருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இதையும் படிங்க: இளைஞரை கட்டாயப்படுத்தி மலம் உண்ண வைத்த கொடூரம்! வாந்தி எடுத்தும் விடல...வெளியான அதிர்ச்சி வீடியோ..!!!
மீட்புப் பணிகள் தீவிரம்
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளத்தில் சிக்கிய மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகளும், தேவையான நிவாரண உதவிகளை வழங்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
வைரலாகும் காணொளி
இந்த Flood Rescue காட்சி சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விரைந்து உதவிகள் கிடைக்க வேண்டும் என்றும், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என்றும் பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
बेहद ही भावुक करने वाला वीडियो सामने आया है। 😭
— Sunil Kumar (@sunilku20403616) July 25, 2026
जानकारी के मुताबिक यह वीडियो असम से आया है इस वीडियो में साफ देखा जा सकता है कि बच्चे मां के साथ पेड़ पर चढ़े हुए हैं ।
बाढ़ के पानी घर के छतों के बराबर बह रही है...जान बचाने के लिए कुछ लोग पेड़ पर चढ़े हुए हैं।
छतों तक बहता… pic.twitter.com/UyTxLKelld