Video : ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமண அலங்கார காணொளி வைரல்!!!
பீதியில் மக்கள்... இரத்த கரையுடன் மனிதக் காலைக் கவ்விக்கொண்டு ஓடிய நாய்! அதிர்ச்சி காட்சி...!!!
சிம்லாவில் உள்ள மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் மருத்துவத் துறையில் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. சிகிச்சைக்காக அகற்றப்பட்ட மனித உடல் உறுப்பை தெரு நாய் ஒன்று வாயில் கவ்விக்கொண்டு சுற்றித்திரிந்த காட்சி அங்கிருந்தவர்களை பதற வைத்தது. இந்த சம்பவம் மருத்துவ கழிவு மேலாண்மை முறைகளில் ஏற்பட்ட கடும் குறைபாடை வெளிச்சமிட்டுள்ளது.
அதிர்ச்சியூட்டிய காட்சி
ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா சமியானா பகுதியில் அமைந்துள்ள அடல் மருத்துவ அறிவியல் கழக (AIMSS) வளாகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வளாகத்திற்குள் தெரு நாய் ஒன்று துண்டிக்கப்பட்ட மனிதக் காலை வாயில் கவ்விக்கொண்டு சுற்றியதிர்ந்தது. இதைப் பார்த்த நோயாளிகள் மற்றும் உறவினர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளியின் கால்
முதற்கட்ட விசாரணையில், மண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 61 வயது நோயாளியின் கால் பிப்ரவரி 19-ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது. விதிமுறைகளின்படி, அகற்றப்பட்ட உடல் உறுப்புகள் மஞ்சள் நிற மருத்துவக் கழிவு பையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, குறிப்பிட்ட கழிவு அறையில் பூட்டி பாதுகாக்கப்பட வேண்டும்.
இதையும் படிங்க: கோவில் திருவிழாவில் தெய்யம் ஆடிய நபர்! திடீரென பக்தரை தாக்கியதால் மயங்கி விழுந்து.... பரபரப்பு வீடியோ..!!!
கடும் அலட்சியம் வெளிச்சம்
ஆனால் பிப்ரவரி 21-ஆம் தேதி இரவு தூய்மைப் பணியாளர்கள் அந்த கழிவு அறையை முறையாக பூட்டாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக, உள்ளே நுழைந்த நாய் அந்த உடல் உறுப்பை வெளியே எடுத்துச் சென்றுள்ளது. இந்த சம்பவம் அலட்சியம் காரணமாக ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கருதியுள்ளது.
இச்சம்பவம் குறித்து நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் பாதுகாப்பு மற்றும் கழிவு மேலாண்மை விதிகள் கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டியது அவசியம் என்பதையும், இத்தகைய தவறுகள் மீண்டும் நடைபெறாத வகையில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் இந்த சம்பவம் வலியுறுத்துகிறது.
Friends chamiyana hospital shimla ke pass ek dog kisi admi ka foot muh me utha ke dor raha hai. pic.twitter.com/9SZfrE7rGG
— Kalyug (@DarkKalyug) February 24, 2026
இதையும் படிங்க: மருத்துவமனை வாசலில் மனிதக் காலுடன் ஓடிய நாய்! அதிர்ச்சி காட்சியின் உண்மை பின்னணி...!!!