ரோட்டில் கத்தை கத்தையாக கொட்டிய பணம்! கொட்டியது யார்? என்ன காரணம் தெரியுமா?

ரோட்டில் கத்தை கத்தையாக கொட்டிய பணம்! கொட்டியது யார்? என்ன காரணம் தெரியுமா?



A man through lots of money from car to outside in Russia

ரஷ்யாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் விலை உயர்ந்த காரில் வந்து அவரிடம் இருந்த பணத்தை கத்தை கத்தையாக அள்ளி வீசியுள்ள சம்பவம் அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ரஷ்யாவில் மிகவும் பிரபலம் அடைந்த ஒரு சாலையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ரஷ்யாவிலுள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் உள்ள மிகவும் பிரபலமான சாலை அது. ரஷ்யாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரரின் மகன் சாலை முழுவதும் பணத்தை வீசி எறிந்தவாறே சென்று உள்ளார்.

Men through money outside

இவரது இந்த செயலை பார்த்த அந்த ஊர் மக்கள் இவரிடம் பணம் இருப்பதாலேயே திமிரில் இவ்வாறு நடந்துகொள்வதாக வருத்தம் தெரிவித்தனர். மேலும் அந்த நபர் பணத்தை வீசும்போது மக்கள் அனைவரும் இந்த பணத்திற்காகவே கஷ்ட படுகின்றனர் எனவே இதை வைத்துக்கொள்ளுங்கள் என அவர் சொல்லிக்கொண்டே பணத்தை வீசியுள்ளார். இதனால் இவரது நல்ல உல்லத்தை பார்த்த சிலர் அவரை புகழ்ந்துள்ளனர்.