அடக்கொடுமையே... உள்ளகையில் வைத்து நாகப்பாம்பிற்கு தண்ணீரா? வியக்க வைக்கும் வீடியோ காட்சி....



snake-drinks-water-from-human

மிகவும் அபாயகரமான ஒரு ஜீவராசியான பாம்புகள் பொதுவாகவே மனிதர்களிடையே பயத்தை ஏற்படுத்துகின்றன. விஷத்தன்மை கொண்ட இவை மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வாய்ப்பு இருப்பதாலேயே அவர்கள் அருகில் செல்வதற்கு பலர் தயங்குவர்.

ஆனால், சமீப காலங்களில் சமூக வலைதளங்களில் வைரலாகும் சில காணொளிகள், பலரது எண்ணங்களை மாற்றுகிறது.  ஒரு நபர் பாம்பு ஒன்றிற்கு தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீர் ஊற்றி உள்ளகையில் தண்ணீர் கொடுக்கும் காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி  பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இந்த நிகழ்வின் மூலம் பாம்புகளும் தாகம், பசிக்கு உட்பட்ட உயிரினங்கள்தான் என்பதை உணர்த்துகிறது. சில தருணங்களில், சமையலறை, படுக்கையறை, வாகனங்கள் போன்ற இடங்களில் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பாம்புகள், இங்கு தாகத்தில் தண்ணீர் குடிக்கும் இயல்பான ஒரு நிலை காணப்படுகிறது.

இதையும் படிங்க: வைரல் வீடியோ : துளி கூட பயமில்லை... பாம்பின் வாலை பிடித்து விளையாடும் சிறுவன்! மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி...

சிலர் பாம்புகளை பயமின்றி கையில் எடுத்து விளையாடுவதும், அதனுடன் உறங்குவதும் போன்ற விபரீதமான செயல்கள் கூட இணையத்தில் பரவிவருகின்றன. அதற்கேற்ப, ஒரு பாம்பு மற்றொரு பாம்பை விழுங்கும் நிகழ்வுகளும் நாம் பார்த்துள்ளோம். இப்படி இருக்க சிறுதும் பயமின்றி தண்ணீர் கொடுக்கும் காட்சி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: வைரல் வீடியோ : நம்பவே முடியல... மனிதனை போல் மாடு ஸ்கூட்டி ஓட்டுதா? வியக்க வைக்கும் காணொளி....