அட.. நயன்தாராவுக்கு ரொம்ப பிடித்த சீரியல் இது தானாம்! மிஸ் பண்ணமா தினமும் பார்த்துடுவாங்கலாம்!
வீடியோ : அப்பா.அப்பா என கதறி அழுத குழந்தை..தந்தையின் உயிரை காப்பாற்றிய 2 வயது சிறுமியின் துணிச்சல் செயல்! இணையத்தில் வைராலாகும் காட்சி..

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் ஒரு வீடியோ அனைவரையும் சிந்திக்க வைக்கும் வகையில் உள்ளது. இதில், இரண்டு வயது சிறுமியின் துணிச்சலும், அவளுடைய புத்திசாலித்தனமான செயலும், அவரது தந்தையின் உயிரை காப்பாற்றிய உண்மை சம்பவமாக பதிவாகியுள்ளது.
வீட்டில் இரவு நேரம். சிறுமியும், அவரது தந்தையும் தூங்கிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் சிறுமி முதலில் விழித்து, தந்தை அசையாமல் இருக்கக் காண்கிறாள். உடனே பதட்டமாகி, "அப்பா, அப்பா!" என அழைய ஆரம்பிக்கிறாள். ஒருபுறம் அழும் நிலையில் இருந்தாலும், துணிச்சலை இழக்காமல், உடனடியாக ஹாலுக்குச் சென்று குளுக்கோஸ் மாத்திரையை எடுத்து வருகிறாள்.
தந்தையின் வாயில் அதை வைக்கிறாள். சில நிமிடங்களுக்குள் தந்தை மயக்க நிலையில் இருந்து மீண்டு விழிக்கிறார். அப்போதுதான் அந்த சிறுமி பாசமிகுந்த குரலில் சொன்ன வார்த்தைகள் –
இதையும் படிங்க: viral video: ஐயோ..கூரையை பிய்த்து கொண்டு விழுந்த 3 பாம்புகள்! அலறிய மக்கள் கூட்டம் சிலிர்க்க வைக்கும் காட்சி....
"வா, சாப்பிட போலாம், நேரம் ஆச்சு."
இந்த உருக்கமான தருணம் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமெராவால் பதிவாகி, இணையத்தில் பரவி வருகிறது. விசாரணையில் தெரிய வந்தது – தந்தை குறைந்த இரத்த சர்க்கரை அளவால் மயக்க நிலைக்குச் சென்றிருந்தார். ஆனால், அந்த சிறுமியின் செயல்திறன் அவரை மரணதொட்டிலிருந்து மீட்டது.
இரண்டு வயதிலேயே, தந்தையின் உடல்நிலை குறித்த புரிதலும், தேவையான தருணத்தில் எடுத்த முடிவும், இணைய உலகத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பலரும் அந்த சிறுமியை “சிறு வயது ஹீரோ” என்று பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: வைரல் வீடியோ : அசால்ட்டாக பாம்பு குட்டிகளை பிடித்து விளையாடிய சிறுவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! இறுதியில் என்ன நடந்தது பாருங்க...