அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த விமான பணிப்பெண்ணின் தாய் கதறி அழும் வீடியோ! நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி...

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த பணிப்பெண்ணின் தாய் கதறிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரல்
அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்ல திட்டமிட்டு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பறந்தவண்ணம் கீழே விழுந்து பயங்கர விபத்துக்குள்ளாகியது. இந்தச் சம்பவத்தில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, ஏழு குழந்தைகள் மற்றும் இரண்டு கைக்குழந்தைகளும் உள்ளடக்கம் என்பதும் பெரும் சோகத்தைக் கிளப்பியுள்ளது.
இந்த விமானத்தில் பணியாற்றிய பணிப்பெண் ஒருவரின் மரணம் அவரது குடும்பத்தில் தவிக்க முடியாத வலியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அவரது தாய் அழும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
வீடியோவில் அந்த தாய், “என் குழந்தையே, நீ எங்கே போனாய்? நான் உன்னை பார்க்க விரும்புகிறேன்... நீ எங்கே இருக்கிறாய்?” என கதறி அழுவது பலரது நெஞ்சையும் உருக்கும் வகையில் உள்ளது.
இதையும் படிங்க: கடல் அலையில் அடித்து சென்ற சிறுமி! ரீல்ஸ் மோகத்தில் குழந்தையின் உயிரை பலியாக்கிய தாய்! கண்கலங்க வைக்கும் வீடியோ காட்சி...
மேலும், அந்த குடும்பத்தினர் பணிப்பெண்ணின் புகைப்படங்களை பார்த்து அழும் வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது. "இந்தத் தாயின் வலிக்கு எந்த மருந்தும் இல்லை, இது விதியின் சதி," என சமூக வலைதளங்களில் கண்கலங்கும் கருத்துகள் பதிவாகின்றன.
இந்த உணர்வுபூர்வமான வீடியோ, விமான விபத்தின் மனிதநேய பக்கத்தை வெளிப்படுத்துவதோடு, உயிரிழந்தோரின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பாதிப்பையும் நம்மிடம் கொண்டு வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் எப்போதும் நம்மை நினைவூட்டுவது, தொழில்நுட்பம் வளர்ந்தாலும் உயிரின் மதிப்பு என்றும் அழியாது என்பதே.
VIDEO | Ahmedabad plane crash: Family members of Nganthoi Sharma Kongbrailatpam, a crew member on board Air India flight AI171 en route to London, break down in grief upon receiving news of the tragic incident.#AhmedabadPlaneCrash #planecrash
— Press Trust of India (@PTI_News) June 12, 2025
(Full video available on PTI… pic.twitter.com/djxkfR22Op