வீடியோ: பார்க்கும்போதே மனசு பதறுது!! மின்கம்பத்தில் சிக்கிய பறவையை மீட்கச்சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி மரணம்! அதிர்ச்சி வீடியோ..

மின்கம்பியில் சிக்கியிருந்த பறவையை மீட்க சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டம் மால்பூர் தாலுகாவில் நடந்துள்ளது.

இளைஞர் ஒருவர் கடைவீதிக்கு சென்றுகொண்டிருந்தபோது அங்கிருந்த மின்கம்பியில் பறவை ஒன்று சிக்கி உயிருக்கு போராடுவதை பார்த்த அந்த இளைஞர், கையில் குச்சியுடன் மின்கம்பத்தில் ஏறி அந்த பறவையை மீட்க முயன்றபோது அந்த இளைஞர் மீது மின்சாரம் தாக்கியதில், நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.




Up Next