வீடியோ: கடலுக்கு மேல் பறக்கும் ரயில்!! உலகமே மிரள அடுத்த அறிவிப்பு.. வைரலாகும் வீடியோ..

சீனாவில் கடலுக்கு மேல் தூண்கள் அமைத்து முதல் முறையாக புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. பியூஜியான் மாகணத்தின் ஃபுசோ நகரில் தொடங்கி தைவான் வரை செல்லும் இந்த ரயில் சேவை பார்ப்போரை பிரமிக்கவைத்துள்ளது.

ஜலசந்தி அருகே உள்ள சியாமன் பகுதியை இணைக்கும் வகையில் இந்த இந்த புல்லட் ரயில் இயக்கப்படுகிறது. கடலின் மேல் அதிநவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள ஓடுபாதையில் இயக்கப்படும் இந்த புல்லட் ரயில் மூலம் போக்குவரத்து மற்றும் வர்த்தக வளர்ச்சி அதிகரிக்கும் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 543 பயணிகளுடன் மணிக்கு 350 கிலோ வேகத்தில் கடல் மேல் பயணித்து சென்ற இந்த புல்லட் ரயில் சேவை பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.




Up Next