சகோதரி உறவுமுறை பெண்ணை கற்பமாக்கிய கயவன்!! அதிர்ச்சியில் பெற்றோர் எடுத்த முடிவு!!

தேனி மாவட்டம் குரங்கனி மலை நடுபட்டி கிராமத்தில் வசிப்பவர் சத்தியராஜ் (21). இவர் அப்பகுதியில் ஜீப் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுமியுடன் பழகி வந்தார்.
நாளடைவில் இவர்கள் பழக்கம் மிகவும் நெருக்கமானத்தில் அந்தச் சிறுமி கர்ப்பமானார். இது குறித்த விபரம் சிறுமியின் பெற்றோருக்கு நீண்ட நாட்களுக்கு பிறகே தெரிந்துள்ளது. இந்தநிலையில், சிறுமிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து பெற்றோர்கள் மகளிடம் விசாரித்தனர். அதில் சத்தியராஜூடன் ஏற்பட்ட பழக்கத்தில் தான் குழந்தை பிறந்தது என சிறுமி கூறினார். இதனையடுத்து தனது மகளை திருமணம் செய்து கொள்ளும் படி அவரது பெற்றோர் சத்தியராஜிடம் கூறினர்.
ஆனால், அவர் தனக்கு தங்கை உறவு முறை என்பதால் அவரைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்து விட்டார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் மகளிர் போலீசாரிடம் புகார் செய்தார். இதனையடுத்து சத்தியராஜை போலீசார் கைது செய்தனர்.